Wednesday, December 14, 2011

அப்பாவோட தெவசம்

இன்னக்கி அப்பாவோட தெவசம் (திவசம்) அப்பா அம்மா இருக்கும் போட்டோ படத்தை தொடச்சிட்டு ரொம்ப நேரமா பாத்திட்டு இருந்தேன் அப்பா..வேலூர் போலீஸ் லைன்ல இருக்கும்போது என்ன காம்பௌண்டு சொவத்து மேல ஒக்கார வச்சி வெளிய மெயின் ரோட்டுல போற வர்ற வண்டிய வேடிக்க காட்டிட்டு இருப்பார். கத சொல்லுப்பான்னா 'போச்சுன மண்ட வந்தன மண்ட" ன்னு என்னம்மாவது சொல்லிக்கிட்டு இருப்பாரு அப்பாவுக்கு கதையே சொல்ல வராது அம்மாவுக்கு வித விதமா கதைசொல்ல வரும் அம்மான்னு இல்ல அவங்க அக்கா தங்கச்சிமாருங்கஅத்தனி பேருக்கும் கத சொல்ல வரும் அதுவும் கதக்கின்னு பொறந்த மாதிரி சூர்கத்தி பெரிம்மா சொல்ற கதையெல்லாம் சூப்பரா இருக்கும் .. அவங்களோட மடியில படுத்துகிட்டு பொகயிலை வாசத்தை மொகந்துக்கின்னு கத கேக்கறதே ஒரு சொகந்தான் .. கிட்டத்தட்ட எல்லா பெரியம்மாகிட்டவும் இந்த பொகயிலை வாசம் அடிக்கும் நானும் ஒரு தபாபொகயிலைபோட ட்ரை பண்ணேன் எம்மாடி .. கண்ணுல்லாம்சொருவிக்கிட்டு போயிடுச்சு எப்படித்தான் போடராங்களோ விடிஞ்சி அதோட மொகத்துல முழிக்கிற ஜனங்களும் இருக்கு பொகயிலை கெடைக்காம பயித்தியம் புடிச்சா மாதிரு ஒக்காந்திருக்கும் ஆளுங்களை பாத்திருக்கேன்.. யாங்க்க்கா ஒரு துண்டு போயலை குடேங்க்க்கான்னு கேஞ்சறதே நெறைய தடவ பாத்திருக்கேன் .. அது ஒரு சொகம்.. வெத்தில போடறதும் அப்படித்தான் அது ஒரு கலை மாதிரி பெருசுங்க போடறத வேடிக்கை பாத்துகிட்டு ஒக்காந்திருக்கிறதுண்டு அதாலையோ என்னமோ வெத்தல பெட்டிக்கு வெத்தல செல்லம்ன்னு ஒரு பேரு உண்டு தங்கவேல் மாமா சூர்கத்தி பெரிமாவோட வீட்டுக்கு வெளியே .....(அத வீடுன்னு சொல்ல முடியாது. ஒத்த ரூம் அதலதான்அதோட வாழ்க்கைய வாழ்ந்து முடிச்சுது ..) அவர் ஒக்காந்துகிட்டு சாகவாசமா வெத்தல போடறத கிட்ட இருந்து சுவாரஸ்யமா பாப்போம் .. ரெண்டு பெரும் என்னென்னமோ பேசிகிட்டே இருப்பாங்க அவருக்கு இவங்க மேல ஒரு இதுன்னு கூட சொல்ல கேட்டிருக்கேன் இருக்கலாம் சின்ன வயசுலேயே "அறுத்துட்டு" வந்தவங்க ...புருஷன் , குடும்பம், கொழந்தேன்னு இருந்து வாழ்ந்தது கெடயாது சின்ன வயசுலேயே எல்லாம் முடிஞ்சி போச்சு .. ஊர்லயேபெரிய பணக்காரன்னு அந்த கிழவனுக்கு குடுத்திருக்காங்க மூனாவதோ நாலாவதோவா வாக்கப்பட்டாங்க .. கெழவன் கல்யாணத்துக்கு ரெண்டாவது வருஷமோ மூணாவது வருஷமோ மண்டய போட்டுருச்சு ..என்ன பண்றது ஏழு அக்கா தங்கச்சிக்கும் ஒரே அண்ணன் ... வந்துருச்சி அண்ணன் வீட்டுக்கு .. அப்பத்திலே இருந்து அண்ணன் வீடு தான் வாழ்க்கைன்னு ஆயிடுச்சி அக்கா தங்கச்சி மாருங்க புள்ள பெத்தா ... சீக்குல விழுந்தா ஒடனே அவசரத்துகேத்த மாதிரி ஆளு வரும் இல்ல லெட்டர் வரும் ஒடனே ரெண்டு சேலை ரவிக்கைய தூக்கிகிட்டு ஓட வேண்டியதுதான்னு பொழப்பு ஆயிடுச்சி என்னோடஎல்லா தங்கச்சி தம்பி மாருங்களுக்கு சூர்கத்தி பெரிம்மா சூத்து கழுவி விட்டு இருக்கு குளுப்பாட்டி கூழு ஊத்தி இருக்குஆனா சமயக்கட்டு வேல மட்டும் புடிக்காது .. பட்டினியா வேணா இருக்குமே தவிர சோறாக்கி சாப்படணும்னா அவ்ளோ கசக்கும் ...
எங்களுக்கெல்லாம் சூர்கத்தி பெரிம்மா ஊர்லருந்து வராங்கன்னா அவ்ளோ சந்தோசம்.. ஒன்னு கத கேக்கலாம் ரெண்டு அம்மாவோட திட்டுல இருந்து தப்பிச்சிக்கலாம் .. எங்கள அம்மா திட்டினா ஒடனே பெரிம்மா சப்போட்டுக்கு வரும் "யாண்டி  கொயந்திங்கள போட்டு அப்பிடி போரிச்சி எடுக்கற வெளயாடற பசங்களுக்கு இன்னா தெரியும்.. நீ போடா கண்ணே ன்னுட்டு எங்கள காப்பாத்தி விடும் ..  அதுவும் போயி சேந்துருச்சி .. கடசி காலத்துல பார்வதி தான் அதோட பீ.. மூத்ரம் வாரிப்போட்டா .. சங்கரு போய் அதுக்கு கொள்ளி போட்டுட்டு வந்தான்.. தனக்குன்னு ஒரு வாரிசு இல்லாம போய் சேர்ந்திருச்சி ..   

Tuesday, October 27, 2009

பன்னண்டு மணி....

பன்னண்டு மணி.... செக்யுரிட்டி டான்.. டான்.. ன்னு மணி அடிக்கிறது.. நிசப்தமான இரவில் கணீறேன்று கேட்கின்றது... இன்னமும் தூக்கம் வரமாட்டேங்குது. வயசா மனசா.. ன்னு தெரியல.. கண்டிப்பா வயசாகிறது உண்மைதான். ஆனா ரொம்ப பேர் கிட்ட பேசும்போது எம்மனசுக்கு இன்னும் வயசாகல.. ன்னு தான் பேசிகிட்டு இருக்கேன்.. அது உண்மை தான்னு கூட தோணுது. இன்னமும் வயசு பசங்க கூட தான் வம்பு பேசணும் போல இருக்க. அவங்கள கலாய்க்கிறது.. நக்கலடிக்கிறது.. நோன்டிப்பாக்கறது எல்லாம் ஜாலியாதான் இருக்கு.. எல்லாத்துக்கும் மேல் சின்னக்குழந்தைகலோடே வெளையாடறது இன்னமும் ரொம்ப குளிர்ச்சியா இருக்கு.    எவ்வளவு வயசானாலும் சின்ன வயசு நினைவுகள் சில பசுமரத்தாணி போல் (அது என்னாடா பசுமரத்தாணி.. ஒரு தடவயாவது அந்த மாதிரி பசுமரத்துல ஆணி அடிச்சிருக்கியாடா நீ..) இருக்கிறது.. ரொம்ப ரொம்ப சின்ன வயசுல.. என்ன 2 அல்லது ரென்டரை வயசுல சாந்தாக்கா கமலாக்கா (என்றுதான் நினைக்கிறேன்).. அப்பறம் கனகராஜி அண்ணன்.. அவங்களோட  போலீஸ் குவார்ட்டர்ஸில்  வெளயாண்டது..
அந்த மாமாவை (சாந்தாக்காவோட அப்பா) பார்க்கவே பயமா இருக்கும். (அவர் பேர் ஞாபகம் வர மாட்டேங்குது) அப்ப அவர் ஏட்டய்யாவா இருந்தார்.. கடசி வரைக்கும் ஏட்டய்யாவாத்தான் இருந்தார் என நினைக்கிறென். ஏன் எங்கப்பாகூட போலீஸ் கான்ஸ்டபுலா சேர்ந்து ரிடயர்மென்ட் வரைக்கும் அதே கான்ஸ்டபுலாவே ரிடயர் ஆய்விட்டார். வெள்ளக்காரன் கிட்ட போலிஸ்ல வேல செஞ்சத பத்தி எப்பவாவது அத்தி பூத்தமாதிரி பேசுவார். ஐதராபாத் நிஜாம் அந்த காலத்துல இந்திய ராஜ்ஜியத்துகூட சேர மாட்டேன்னு பிடிவாதம் பிடிச்சது.. சர்தார் வல்லபாய் படேல் நிஜாமை மிரட்டி பணியவச்சது.. அதுக்காக வேண்டி அப்பா இருந்த பட்டாலியனை ஐதராபாத்துல முகாம் போட்டு டூட்டி பாத்ததெல்லாம் சொல்வாரு. அப்பாவுக்கு வர்ணணை எல்லாம் வராது.. சும்மா ரேடியோவுல செய்தி வாசிக்கற மாதிரி எதையாவது சொல்வாரு.. கதைசொல்றேன் பேர்வழின்னுட்டு.. போச்சுன்னமண்டை வ்ந்தனமண்டை.. ந்னுட்டு என்னத்தையோ சொல்லிகிட்டிருப்பாரு.. போப்பா இந்த கதை நல்லாவே இல்லன்னு கையை ஒதறிகிட்டு வேற திக்குல பாத்துகிட்டு இருப்போம். அம்மா கதையை இது வரைக்கும் யாரும் அடிச்சிகிட்ட மாதிரி தெரியல. பெருவாரியாக சாமி கதைங்க.. புள்ளையார் எப்படி ஒலகத்தை சுத்தாமயே அப்பா அம்மா கிட்ட இருந்து மாம்பழத்தை தட்டினது.. அப்பறம்..அவ்வையாருக்கு முருகன் சுட்ட பழத்தை குடுத்தது.. எல்லாம்.. அப்பப்ப முயல் ஆமை ரேஸ் கதையெல்லம் கூட வரும்.. ஆனா ஆயா (அப்பத்தா) வுக்கு தெரிஞ்ச அந்த ஒரே கதையான குசு உட்ட கதையைக்கேட்டு கேட்டு... அலுத்துப்போச்சு எங்களுக்கு. மிக்கவாறும் ஆயாகிட்ட கதையே கேக்கறதுல்லன்னு ஆய் போச்சு. ஆனா எங்க ஆயா மாதிரி அவங்களுடைய  பேரப்புல்லைங்ககிட்ட பாசத்தைக்காட்ட யாராலும் முடியாது.. எல்லா நேரத்திலையும் மடியில எங்களுக்கு என்னமாவது திங்கறதுக்கு  கேரண்டியா  வச்சிருக்கும். எல்லாத்துக்கும் மேல ஆயாவோட மடியில படுத்துக்குனு அவங்க மடியிலருந்து வரும் வெத்தல போயல வாசம் அப்படியே கிறக்கமா கண்ணு சொருக தூங்கறது.. ஆஹா அது ஒரு அனுபவம்..   

Sunday, October 25, 2009

மத்தியானம் நல்லா தூந்க்கிநதுக்கு நன்றி சொல்லணும். இல்லன்னா இப்படி பேயி உலா வர்ற பன்னண்டு மணி ராத்திரியில் உக்காந்து Blog போடுவனா ?.. ஓகே.. இப்பவாவது ஆரம்பிக்க முடிஞ்சதே.. சரி..

Tuesday, April 05, 2005

My first posting

Hello..man kind.. is this globalisation... libaralisation... all this for whom..? only for the rich t become richer...?